உளுந்தூர்பேட்டை, பரமக்குடி அதிமுக எம்எல்ஏக்களுக்கு பாதிப்பு

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளரும் உளுந்தூர்பேட்டை எம்எல்ஏவுமான குமரகுருவுக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திக்கேயன் சிகிச்சை முடிந்து நேற்று சொந்த ஊர் திரும்பினார்.

இதேபோல், பரமக்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகர், அவரது மகன், அவரது உதவியாளர் ஆகிய 3 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.

எம்எல்ஏ சதன் பிரபாகர் பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். எந்த பாதிப்பும் இல்லாத நிலையில், நேற்று 4-வது முறையாக நடந்த சோதனையில் தொற்று உறுதியானது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட 2 எம்எல்ஏக்களையும் முதல்வர் பழனிசாமி தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்