கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளரும் உளுந்தூர்பேட்டை எம்எல்ஏவுமான குமரகுருவுக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திக்கேயன் சிகிச்சை முடிந்து நேற்று சொந்த ஊர் திரும்பினார்.
இதேபோல், பரமக்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகர், அவரது மகன், அவரது உதவியாளர் ஆகிய 3 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.
எம்எல்ஏ சதன் பிரபாகர் பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். எந்த பாதிப்பும் இல்லாத நிலையில், நேற்று 4-வது முறையாக நடந்த சோதனையில் தொற்று உறுதியானது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட 2 எம்எல்ஏக்களையும் முதல்வர் பழனிசாமி தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
9 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago