நடிகர் சங்கத் தேர்தல்: அக்டோபர் 8-ல் இறுதி வேட்பாளர் பட்டியல் - நீதிபதி ஈ.பத்மநாபன் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர் தலில் போட்டியிடும் வேட்பாளர் களின் இறுதி பட்டியல் அக்டோபர் 8-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான ஈ.பத்மநாபன் அறிவித்துள்ளார்.

நடிகர் சங்கத்துக்கான தேர்தல் அக்டோபர் 18-ம் தேதி நடைபெற வுள்ளது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் குறித்து நீதிபதி ஈ.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் அக்டோபர் 8-ம் தேதி வெளியிடப்படும். சென்னை நகர எல்லைக்கு அப்பால் வசிக்கும் வாக்காளிக்கும் உரிமை பெற்ற உறுப்பினர்களின் முகவரிக்கு அக்டோபர் 9-ம் தேதி வாக்குச்சீட்டு தபாலில் அனுப்பப்படும்.

தபாலில் அனுப்பப்படும் வாக்குச் சீட்டுகள் அக்டோபர் 17-ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணை யர் அலுவலகத்துக்கு வந்து சேர வேண்டும். சென்னைக்கு அப்பால் வசிக்கும் வாக்களிக்கும் உரிமை பெற்ற உறுப்பினர்கள் நேரில் வந்து வாக்களிக்க கோரும் விண்ணப்பம் செப்டம்பர் 30-ம் தேதி தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு வந்து சேர வேண்டும். அதன்பிறகு வந் தால் நிராகரிக்கப்படும். அனுமதி கொடுக்கப்பட்டவர்கள் தங்கள் உறுப்பினர் அடையாள அட்டையை தவறாமல் கொண்டு வர வேண்டும்.

உறுப்பினர்கள் தங்களுடைய முகவரி மாற்றம் பற்றி தேர்தல் ஆணையர் அலுவலகத்துக்கு செப்டம்பர் 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் கடிதம் மூலம் தெரிவிக்கலாம். அதன்பிறகு தெரி வித்தால் ஏற்றுக்கொள்ளப்படாது. சங்க விதிகளின்படி தேர்தல் நடத்தப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்