குமரி மாவட்டத்தில் கரோனா தொற்று எற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மாவட்டம் முழுவதும் கூடுதலாக 2000 படுக்கை வசதிகளுக்காக பள்ளி கல்லூரிகளை மருத்துவமனைகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பணிகளை தனி சிறப்பு அதிகாரி ஜோதி நிர்மலா ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 245 பேர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குமரி மாவட்டம் முழுவதும் கூடுதலாக 2000 படுக்கை வசதிகள் தயார் படுத்தும் பணிகள் தீவிரமக நடைபெற்று வருகிறது. அதற்காக மாவட்டம் முழுவதும் 7 இடங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளை மருத்துவமனைகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்தப் பணிகளை மாவட்ட தனி சிறப்பு அதிகாரி ஜோதி நிர்மலா ஆய்வு செய்தார். முதற்கட்டமாக நாகர்கோவிலில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, இந்துக்கல்லூரியில் அமைக்கபட்டு வரும் படுக்கை வசதிகளை அவர் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே உடனிருந்தனர்.
நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் கரோனா சிறப்பு சிகிச்சை, மற்றும் படுக்கை வசதிகள் அமைக்கப்படுவதை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்த மாவட்ட சிறப்பு அதிகாரி ஜோதி நிர்மலா.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
43 mins ago
ஜோதிடம்
48 mins ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
வாழ்வியல்
6 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
9 hours ago
ஓடிடி களம்
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago