தென்காசி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 347 பேர் கண்டறியப்பட்டதில் 198 பேர் குணமடைந்து வீடு
திரும்பியுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடகரையைச் சேர்நத 64 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால், தென்காசி மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர் உடலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்தனர்.
வருவாய் பேரிடர் வட்டாட்சியர், வீரகேரளம்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர், கல்லூரணி வருவாய் அலுவலர் உட்பட புதிதாக மேலும் 20 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 267 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக தொற்று கண்டறியப்பட்டவர்களில் 3 பேர் சென்னையில் இருந்து வந்தவர்கள்.
மற்ற அனைவரும் ஏற்கெனவே தொற்றால் பாகிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் சளி, இருமல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதால் பரிசோதனை செய்யப்பட்டவர்கள் என்று சுகாதாரத் துறையினர் கூறினர்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 hours ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
12 hours ago
விளையாட்டு
13 hours ago
இந்தியா
14 hours ago
தமிழகம்
14 hours ago