எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திட்டங்களால் தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள்குறைந்துள்ளனர் என அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்தார்.
வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் நேற்றுகொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார். வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி, தொழிலாளர் இணை ஆணையர் புனிதவதி, வட்டாட்சியர் சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நோட்டீஸ், விளம்பர பதாகைகளை வெளியிட்டு பேசும்போது, "தமிழக முதல்வராக இருந்தஎம்ஜிஆர் சத்துணவு திட்டத்தை விரிவுப்படுத்தினார். ஜெயலலிதா கடந்த 1994-ம் ஆண்டு அனைவருக்கும் கட்டாய ஆரம்ப கல்வி திட்டத்தை கொண்டு வந்தார். இதனால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் பெற்றோர் மத்தியில் எழுந்தது. குழந்தைதொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைந்தது.
குழந்தை தொழிலாளர்களைமீட்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அவசரஉதவி எண் 1098 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது " என்றார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
15 mins ago
தமிழகம்
52 mins ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
வாழ்வியல்
9 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
12 hours ago
ஓடிடி களம்
12 hours ago