தூத்துக்குடியில் கரோனா தொற்று 200-ஐ தாண்டியது: குணமடைந்தோர் எண்ணிக்கை 133-ஆக அதிகரிப்பு

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது. மேலும், கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை கரோனா தொற்றால் மொத்தம் 199 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை வரை மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 23 பேர் நேற்று மாலையிலும், 6 பேர் இன்று காலையிலும் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

30 mins ago

க்ரைம்

28 mins ago

விளையாட்டு

57 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்