மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் குருவின் மகன், மருமகன் அவரது சகோதரரை பாமக பிரமுகரின் குடும்பத்தினர் முன்விரோதத்தால் அரிவாளால் வெட்டினர். காயமடைந்தவர்களுக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகேயுள்ள காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு. அவரது மகன் கனலரசன் (24). இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த பாமக பிரமுகரான சின்னப்பிள்ளை குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (மே.26) நள்ளிரவு இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், கனலரசன், அவரது சகோதரி கணவர் மனோஜ், அவரது சகோதரர் மதன் ஆகியோரை, சின்னப்பிள்ளை, அவரது மகன் அய்யப்பன், சின்னப்பிள்ளை தம்பி காமராஜ், அவரது மகன் சதீஷ் ஆகியோர் தாக்கியதுடன், அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் குரு மகன் கனலரசன், மருமகன் மனோஜ், அவரது அண்ணன் மதன் ஆகியோர் காயமடைந்தனர். கனலரசன் தரப்பு வெட்டியதில் எதிர்த்தரப்பைச் சேர்ந்த காமராஜ் மகன் சதீஷுக்கும் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, அனைவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மீன்சுருட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காடுவெட்டி கிராமத்தில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
வணிகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
தொழில்நுட்பம்
6 hours ago
சினிமா
7 hours ago
க்ரைம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
8 hours ago
க்ரைம்
8 hours ago