திருவாரூர் மாவட்டம் அலிவலம் கிராமத்திலுள்ள ரேஷன் கடையில் மே மாதத்துக்கான இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதை நேற்று பார்வையிட்ட தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு சார்பில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒவ்வொரு நபருக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. மே மாதத்துக்குரிய ரேஷன் பொருட்கள் 2 நாட்களில் 30 சதவீதம் வரை வழங்கப்பட்டுவிட்டன. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிடங்குகளிலும் 100 சதவீதம் அரிசி இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 85 சதவீத பொருட்கள் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சென்றடைந்து விட்டன என்றார்.
கரோனா ஊரடங்கு காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இயங்கும் 5 அம்மா உணவகங்களில், அதிமுக சார்பில் ஏப்.21 முதல் விலையில்லாமல் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது மே 4 முதல் மே 17 வரையுள்ள நாட்களிலும் 3 வேளையிலும் விலையில்லாமல் உணவு வழங்க அதிமுக சார்பில் ரூ.1,83,400-க்கான காசோலையை ஆட்சியர் த.ஆனந்திடம் அமைச்சர் ஆர்.காமராஜ் நேற்று வழங்கினார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
11 mins ago
இந்தியா
21 mins ago
விளையாட்டு
10 mins ago
இந்தியா
26 mins ago
தமிழகம்
48 mins ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
தொழில்நுட்பம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
சினிமா
10 hours ago
தமிழகம்
11 hours ago
விளையாட்டு
13 hours ago