2 நாட்களில் 30% பேருக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம்: அமைச்சர் காமராஜ்

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் அலிவலம் கிராமத்திலுள்ள ரேஷன் கடையில் மே மாதத்துக்கான இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதை நேற்று பார்வையிட்ட தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு சார்பில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒவ்வொரு நபருக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. மே மாதத்துக்குரிய ரேஷன் பொருட்கள் 2 நாட்களில் 30 சதவீதம் வரை வழங்கப்பட்டுவிட்டன. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிடங்குகளிலும் 100 சதவீதம் அரிசி இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 85 சதவீத பொருட்கள் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சென்றடைந்து விட்டன என்றார்.

கரோனா ஊரடங்கு காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இயங்கும் 5 அம்மா உணவகங்களில், அதிமுக சார்பில் ஏப்.21 முதல் விலையில்லாமல் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது மே 4 முதல் மே 17 வரையுள்ள நாட்களிலும் 3 வேளையிலும் விலையில்லாமல் உணவு வழங்க அதிமுக சார்பில் ரூ.1,83,400-க்கான காசோலையை ஆட்சியர் த.ஆனந்திடம் அமைச்சர் ஆர்.காமராஜ் நேற்று வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

11 mins ago

இந்தியா

21 mins ago

விளையாட்டு

10 mins ago

இந்தியா

26 mins ago

தமிழகம்

48 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

13 hours ago

மேலும்