சிங்கம்புணரி அருகே தன்னிடம் பயிலும் மாணவர்களுக்கு அரிசி வழங்கிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்

By இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே தன்னிடம் பயிலும் மாணவர்களுக்கு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் சொந்தச் செலவில் அரிசி வழங்கினார்.

சிங்கம்புணரி அருகே புழுதிப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 94 மாணவர்கள் பயில்கின்றனர். இப்பகுதி மலைக் காடுகளாக இருப்பதால் கூலித்தொழிலாளர்களின் குழந்தைகளே இப்பள்ளியில் பயில்கின்றனர்.

இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் புழுதிப்பட்டி பகுதி மக்கள் வேலையின்றி உணவுக்கே சிரமப்பட்டனர். இதையடுத்து, புழுதிப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜேம்ஸ் தன்னிடம் பயிலும் 94 மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று தனது சொந்தச் செலவில் தலா 5 கிலோ அரிசி வழங்கினார்.

மேலும், புழுதிப்பட்டி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைக் காவலர்களுக்கும் தலா 10 கிலோ அரிசி வழங்கினார். அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரின் இச்செயலை அனைத்துத் தரப்பினரும் பாராட்டினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

26 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

33 mins ago

இந்தியா

45 mins ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

வணிகம்

1 hour ago

மேலும்