கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமான, பராமரிப்புப் பணிகள் தொடக்கம்

By அ.அருள்தாசன்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஊரடங்கு உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3, 4-வது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் பகுதிவாரியாக தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் மற்றும் 2-ம் அணு உலைகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

3 மற்றும் 4-வது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. இப்பணிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

கரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதை அடுத்து கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் அணுமின் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

அதேநேரத்தில் முதல் மற்றும் 2-ம் அணு உலைகளுக்கான மின் உற்பத்தி பணிகளில் 30 சதவீத அணுமின் உற்பத்தி கழக ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று முதல் அணுமின் வளாகத்தில் இருந்த 2,500 வடமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் பராமரிப்பு மற்றும் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கூடங்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஒப்பந்த பணியாளர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை முதலே அணுமின் நிலைய பணிக்கு சென்றனர்.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மே 3-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டம் சிவப்பு மண்டல பகுதியில் இருக்கும் நிலையில் பணிகளை தொடங்கியிருப்பதற்கு அணுசக்திக்கு எதிரான அமைப்புகளை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

உலகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

5 hours ago

மேலும்