செப். 2-ல் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சென்னையில் உண்ணாவிரதம்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டையில் அனைத்து கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கங் களின் சார்பில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற இந்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: கூட்டுறவு வங்கியில் இருந்து ஓய்வுபெறுவோருக்கு கருணை ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.5000 வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் உருவாக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஆகஸ்ட் 28-ம் தேதி மாவட்டந்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

கோரிக்கை நிறைவேற்றப் படாவிட்டால், செப்டம்பர் 2-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம். அதிலும் தீர்வு காணப்படாவிட்டால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்