சிவகங்கையில் கரோனா தொற்றில் இருந்து ஒருவர் குணமடைந்தார்

By இ.ஜெகநாதன்

சிவகங்கை அரசு மருத்துமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் குணமடைந்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கனவே திருப்பத்தூரில் 9 பேர், இளையான்குடி, தேவகோட்டை, காரைக்குடியில் தலா ஒருவர் என 12 பேருக்கு கரோனா தொற்று இருந்தது.

அதுதவிர ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் ஏற்கனவே சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த 4 பேர், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் என 6 பேர் குணமடைந்தனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று இளையான்குடியைச் சேர்ந்த ஒருவர் குணமடைந்தார். அவருக்கு ஆட்சியர் ஜெயகாந்தன் பொன்னாடை போர்த்தி வீட்டிற்கு வழியணுப்பி வைத்தார். மருத்துவ கல்லூரி டீன் ரெத்தினவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 mins ago

க்ரைம்

12 mins ago

இந்தியா

8 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்