நெல்லையில் கண்காணிப்பு வளையத்துக்குள் இருக்கும் 9 இடங்களில் மண்டல சிறப்பு குழு அலுவலர்கள் ஆய்வு

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 9 இடங்களில் மண்டல சிறப்பு குழு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருநெல்வேலியில் மேலப்பாளையம், என்.ஜி.ஓ. காலனி, கோடிஸ்வரன் நகர், டவுண், பேட்டை, பாளையங்கோட்டை, டார்லிங் நகர், களக்காடு, பத்தமடை பகுதிகள் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள மண்டல சிறப்பு குழு அலுவலர்களான கருணாகரன், காவல் துறை கூடுதல் தலைவர் மகேஷ் குமார் அகர்வால், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதிஷ், மாநகராட்சி ஆணையர் கண்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ளவர்களுக்கு ரேபிட் கருவி மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

தேவையானவர்களுக்கு மருத்துவ சிகிச்சை, அத்தியாவசியப் பொருட்கள் நிவாரண நிதி உள்ளிட்டவைகள் தடையின்றி வழங்கப்பட்டு வருவதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

16 mins ago

இணைப்பிதழ்கள்

55 mins ago

உலகம்

26 mins ago

விளையாட்டு

46 mins ago

உலகம்

53 mins ago

க்ரைம்

59 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்