ஊரடங்கு காலத்தில் கூடுதலாக இரண்டு அரசு நெல் கொள்முதல் மையங்கள் அமைப்பு: மாவட்ட வேளாண் இணை இயக்குநர் தகவல்

By சுப.ஜனநாயகச் செல்வம்

மதுரை மாவட்டத்தில் நெல் அறுவடை செய்யும் விவசாயிகள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் சார்பில் வடுகபட்டி, தனியாமங்கலம், வெள்ளலூர், வரிச்சியூர் ஆகிய 4 இடங்களில் நெல் கொள்முதல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

தற்போது ஊடரங்கு காலத்தில் விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் அந்த 4 மையங்களின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலையூர், திருவாலவாயநல்லூர் ஆகிய 2 இடங்களில் புதிதாக நெல் கொள்முதல் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண் இணை இயக்குநர் விவேகானந்தன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், அனைத்து சேவைகள் மற்றும் தங்களுக்கு ஏற்படும் விவசாய சந்தேகங்களுக்கு தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

உதவி இயக்குநர்களின் தொலைபேசி எண்கள் விவரம்: மதுரை கிழக்கு மற்றும் மேற்கு – 99760 37010. அலங்காநல்லூர் 80722 45412. வாடிப்பட்டி 97516 77767. மேலூர் 96295 55530, கொட்டாம்பட்டி 94439 11431, திருப்பரங்குன்றம் 97896 63463, திருமங்கலம் 80562 83334, கள்ளிக்குடி 99948 74372, தே.கல்லுப்பட்டி 99442 06655, செல்லம்பட்டி 94862 26062, உசிலம்பட்டி 94432 93406, சேடபட்டி 94439 78218.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

இந்தியா

51 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்