நாடு முழுவதும் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பணத்தேவையை சமாளிக்க 1.37 லட்சம் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்கள் கணக்கிலிருந்து ரூ.279.65 கோடி பணத்தைப் பெற்றுள்ளனர். மதுரை மண்டலத்தில் ரூ.2.4 கோடி சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலக மண்டல ஆணையாளர் ந.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:
கரோனா பரவலைத் தடுக்க நாடு முழவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களின் உடனடி பணத்தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் அவர்களின் 3 மாத சம்பளத் தொகை அல்லது வருங்கால வைப்பு நிதியில் அவர்களின் கணக்கில் இருக்கும் பணத்தில் 75 சதவீதம் இதில் எது குறைவாக உள்ளதோ அதை பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இப்பணத்தை இணையம் வழியாக விண்ணப்பித்த சந்தாதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம். இணையத்தில் விண்ணப்பிக்கும் போது சந்தாதாரர்கள் தங்களின் வைப்பு நிதி கணக்குடன், ஆதார் எண், வங்கி கணக்கு எண், செல்போன் எண் ஆகியவற்றை அளிக்க வேண்டும். விண்ணப்பித்த 3 நாளில் சந்தாதாரர்களின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கப்படும்.
நாடு முழுவதும் இந்த திட்டத்தில் விண்ணப்பித்த 1.37 லட்சம் சந்தாதாரர்களின் வங்கி கணக்கில் ரூ.279.65 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. மதுரை மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திற்கு உட்பட்ட மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 1300 சந்தாதாரர்கள் முன்பணம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களின் வங்கி கணக்கில் ரூ.2.4 கோடி செலுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் வைப்புநிதி சந்தாதாரர்கள் தங்கள் பிறந்த தேதியை வருங்கால வைப்பு நிதி அலுவலக கோப்புகளில் அவர்களது ஆதார் கார்டில் உள்ள பிறந்த தேதி அடிப்படையில் இணையம் வழியாகவே மாற்றிக்கொள்ளலாம். பிறந்த தேதி வேறுபாடு மூன்றாண்டுக்குள் இருந்தால் ஆதார் கார்டு மட்டுமே போதுமானது. வேறு ஆவணங்கள் தேவையில்லை. இந்த வாய்ப்பை வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
சுற்றுச்சூழல்
30 mins ago
வணிகம்
20 mins ago
இந்தியா
30 mins ago
க்ரைம்
3 mins ago
சுற்றுலா
5 hours ago
தமிழகம்
41 mins ago
இந்தியா
48 mins ago
வணிகம்
51 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago