கரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையில், ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீட்டில் உள்ளனர். இதைப் பயன்படுத்தி மோசடி நபர்கள் பொதுமக்களை ஏமாற்றுவதையும், சமூக விரோதிகள் பொய்ச் செய்தி பரப்புவதையும் குறிப்பிட்டு மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''கோவிட்-19 வைரஸ் தொற்றுப் பரவல் தொடர்பான பல்வேறு பொய்யான செய்திகளும், ஆவணங்களும் சமூக ஊடகங்களில் உலா வருகின்றன. இதைக் கண்டுபிடித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகைத் தகவல் அலுவலகத்தில் தனிப்பிரிவு செயல்படுகிறது.
இந்தப் பிரிவு கோவிட்-19 தொடர்பான தகவல்களை உடனுக்குடன் சரிபார்த்து, உண்மையை எடுத்துரைக்கிறது.
இன்று அவர்கள் அளித்துள்ள எச்சரிக்கை தகவல்கள் இதோ :
* வங்கி மாதத் தவணைகள் செலுத்துவதை தள்ளிப்போடுவதற்கு OTP எண்னைச்சொல்லுங்கள் என்று கேட்கும் சைபர் மோசடிகள் குறித்து கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள். வங்கி மாதத் தவணைகள் செலுத்துவதை தள்ளிப்போடுவதற்கு ஓடிபி எண்ணைத் தெரிவிக்க வேண்டியது இல்லை. உங்கள் ஓடிபி எண்ணை யாருக்கும் தெரிவிக்காதீர்கள்.
* ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், சொகுசு விடுதிகள் ஆகிய அனைத்தும் 2020 அக்டோபர் 15 வரை மூடப்பட்டிருக்கும் என்று மத்திய சுற்றுலா அமைச்சகம் ஆணை பிறப்பித்திருப்பதாக ஒரு போலி ஆவணம் பரவலாகப் பகிரப்படுகிறது. இந்த ஆவணம் போலியானது. அத்தகைய ஆணையை சுற்றுலா அமைச்சகம் பிறப்பிக்கவில்லை. இதனை நம்ப வேண்டாம்.
* வாட்ஸ் அப்பில் வரும் செய்தியை அரசு கவனித்து, உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்ற செய்தி தவறு.
*. கரோனா தொற்று குறித்து சில ஆவணங்களை வலைதளத்தில் உலாவ விடுகின்றனர். அவை போலியானவை.
* `ஆரோக்கிய சேது’ செயலி உங்களைக் கண்காணிக்கும் செயலி என்பது உண்மையல்ல, பொய்யான தகவல்”.
இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
சினிமா
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
6 hours ago
வாழ்வியல்
7 hours ago
தமிழகம்
7 hours ago
ஆன்மிகம்
6 hours ago
கருத்துப் பேழை
7 hours ago