சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயதுடைய பெண் இன்று உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகத்தில் கரோனா பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு
கடந்த மார்ச் 24-ம் தேதி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 54 வயதுடைய நபர் உயிரிழந்தார். இதையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 51 வயது நபர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றிருந்தார்.
இதேபோல், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 53 வயதுடைய பெண் நேற்று முன்தினம் உயிரிழந்தார். டெல்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு ஊர் திரும்பிய கணவர் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரிடம் இருந்து இந்தப் பெண்ணுக்கு தொற்று ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
இதேபோல், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 2 பேர் உயிரிழந்தனர். துபாயில் இருந்து வந்த ராமநாதபுரம் கீழக்கரையைச் சேர்ந்த 71 வயது முதியவர் கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் கடந்த 2-ம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவரது உடலைப் பெற்றுக் கொண்ட உறவினர்கள் சொந்த ஊரான கீழக்கரைக்கு சென்று இறுதிச் சடங்கு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று அதிகாலை அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனை முடிவில், அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த சுகாதாரத் துறை அதிகாரிகள், முதியவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற 200-க்கும் மேற்பட்டோரை கண்டுபிடித்து தனிமைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், டெல்லி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு சென்னை வந்த 60 வயது முதியவருக்கு கரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்ததால், கடந்த 1-ம் தேதி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று அதிகாலை 1.45 மணிக்கு அவர் உயிரிழந்தார். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா வைரஸால் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 57 வயதுப் பெண் உயிரிழந்தார். அவரின் ரத்தத்தைப் பரிசோதனை செய்ததில் கரோனா வைரஸ் தொற்று அவருக்கு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனா பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை, தேனாம்பேட்டையில் இன்று (ஏப்.6) சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
"தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த 57 வயதுப் பெண்மணி ஒருவர் மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளார். நீரிழிவு, ரத்த அழுத்தம் அவருக்கு ஏற்கெனவே இருந்தது. சமீபத்தில் அவர் திருச்சிக்கு ரயில் மூலமாகப் பயணம் செய்திருக்கிறார். இன்று காலையில் அவர் உயிரிழந்தார். அவரின் ரத்தத்தை பரிசோதனை செய்ததில் கரோனா வைரஸ் தொற்று அவருக்கு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் நோய் வந்தவர்களை புறந்தள்ள வேண்டாம். அவர்களிடம் அன்பு காட்ட வேண்டும். ஒரு லட்சம் ரேபிட் கிட் வந்தவுடன் எப்படி சோதனை நடத்துவது என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
பயணம் செய்தவர்கள் முன்வர வேண்டும். அவர்களுக்கு சிகிச்சை அளித்து, அவர்களின் குடும்பத்தினருக்கு வராமல் தடுக்கிறோம். சமூகப் பரவல் ஏற்படாமல் தடுக்கவும் முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருக்கிறோம்.
மூச்சுத்திணறலால் உயிரிழப்பவர்களுக்கு பரிசோதனை செய்ய அறிவுறுத்தியிருக்கிறோம். மருத்துவமனைகளில் சத்தான உணவு வழங்கப்படுகிறது".
இவ்வாறு பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
விளையாட்டு
12 mins ago
கருத்துப் பேழை
3 hours ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
விளையாட்டு
12 hours ago
இந்தியா
12 hours ago
விளையாட்டு
13 hours ago