வங்கிகளின் பரிவர்த்தனை நேரம் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. அவை பழையபடி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மக்கள் கூடும் இடங்களில்கூட்ட நெரிசலைத் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இதையடுத்து, வங்கிகளில் பரிவர்த்தனை நேரம் காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் வங்கிகள் பழையபடி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், மத்திய அரசு வழங்கும் நிவாரண நிதியை பயனாளிகள் பெற வங்கிகள் வழக்கமான நேரத்தில் செயல்பட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதை ஏற்று வங்கிகள் பழையபடி காலை 10 மணி முதல் மாலை4 மணி வரை செயல்படும். மேலும்,வைரஸ் பரவுவதை தடுக்க வங்கியில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதோடு, வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 mins ago
ஜோதிடம்
17 mins ago
வாழ்வியல்
22 mins ago
ஜோதிடம்
48 mins ago
க்ரைம்
38 mins ago
இந்தியா
52 mins ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago