தூத்துக்குடி அனல்மின் நிலைய மின் உற்பத்தி சீரானது

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

மிகப் பழமையான அனல்மின் நிலையம் என்பதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மின்னல் தாக்கியதில் இந்த அனல்மின் நிலையத்தின் 3 மற்றும் 4-வது அலகுகளில் பழுது ஏற்பட்டது. தலா 210 மெகாவாட் வீதம் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், பழுதுகள் முழுமையாக சீரமைக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவில் மீண்டும் மின் உற்பத்தி சீரானது.

அதேவேளை ஆண்டு பராமரிப்பு பணிக்காக 5-வது அலகில் மின் உற்பத்தி நேற்று காலை நிறுத்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்