செல்போனில் குடும்பத்தினரிடம் பேசுவதற்கு கைதிகளுக்கு அனுமதி: மன அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை

By அ.வேலுச்சாமி

கரோனா வைரஸ் காரணமாக நேரடி சந்திப்புக்கு தடை விதித்துள்ளதால் கைதி களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைப்பதற்காக செல்போன் வீடியோ கால் மூலம் குடும்பத்தினரிடம் பேச அனுமதி அளித்து சிறைத் துறை டிஜிபி சுனில்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி கோவை, புழல்-2 ஆகிய மத்திய சிறைகளுக்கு தலா 8 செல்போன்கள், திருச்சி, மதுரை மத்திய சிறைகளுக்கு தலா 6 செல்போன்கள், புழல்-1, பாளையங்கோட்டை, கடலூர், வேலூர், சேலம் ஆகிய மத்திய சிறைகளுக்கு தலா 5 செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல புழல், வேலூர், திருச்சி, கோவை, மதுரையிலுள்ள பெண்கள் தனிச் சிறைகளுக்கு தலா ஒரு செல்போன் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் பேசி வருகின்றனர்.

இதுகுறித்து சிறைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கைதிகள் ஏற்கெனவே அளித்துள்ள எண்களுக்கு மட்டுமே பேச முடியும். புதிதாக சிறைக்கு வந்துள்ள கைதிகள் மற்றும் ஏற்கெனவே செல்போன் எண்களை அளிக்காத நபர்கள், தற்போது தங்களது குடும்பத்தினர் 3 பேரின் எண்களை பதிவு செய்து கொள்ளலாம். குறைந்த பட்சம் 5 முதல் 7 நிமிடங்கள் வரை பேசலாம். எவ்வித கட்டணமும் இல்லை. எந்த எண்ணில், யாருடன், எவ்வளவு நேரம் பேசியுள்ளார் என பதிவேடு பராமரிக்கப்படுகிறது என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

34 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்