காட்டாங்கொளத்தூரில் உள்ள சிவானந்த குருகுலம் நிர்வாகி ராஜாராம் (67) நேற்று உடல்நலக் குறைவால் காலமானார்.
சென்னை அருகே காட்டாங் கொளத்தூரில் சிவானந்த குருகுலம் இயங்கி வருகிறது. இந்த குருகுலத்தின் தலைவராக ராஜாராம் இருந்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களாகவே சுவாசக் கோளாறு மற்றும் சிறுநீரக கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதனால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர், நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடல் காட்டாங்கொளத்தூரில் உள்ள குருகுலத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், கிஷோர், ராஜேஷ் என்ற மகன்களும் உள்ளனர். இன்று இறுதிச் சடங்கு நடைபெறும். தொடர்புக்கு 044-27452345 / 9841002319.
ஸ்ரீ.எஸ்.வி. ஐயர் மற்றும் டாக்டர் வி.மங்கலம் ஆகியோர் கடந்த 1945-ம்ஆண்டில் சிவானந்த குருகுலத்தை நிறுவினர்.
அவர்கள் இதே குருகுலத்தில் பயின்று வந்த ராஜாராமை தத்தெடுத்தனர். 75 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் இந்த குருகுலத்தின் பொறுப்புகளை தனது 19-ம் வயது முதலே ராஜாராம் கவனித்து வந்தார். 2002-ம் ஆண்டில் மத்திய அரசு இவரது சேவையைப் பாராட்டி பத்ம பட்டம் வழங்கி கவுரவித்தது.
இந்த குருகுலத்தில் ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் என 300-க்கும் மேற்பட்டவர்கள் தங்கியுள்ளனர். முன்னாள் பிரதமர் நேரு மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ஆகியோர் இந்த குருகுலத்துக்கு வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
57 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
11 hours ago
இந்தியா
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
சுற்றுச்சூழல்
14 hours ago