தமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை உயர்ந்து வருகிறது. நேற்று 5 நகரங்களில் 95 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலைக்கு மேல் வெயில் சுட்டெரித்தது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பகல்நேர வெப்பநிலை உயர்ந்து வருகிறது. அதனால் பல நகரங்களில் இப்போதே வெயில் சுட்டெரித்து வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது ஈரப்பதம் மிகுந்த கடல் காற்று வீசுவது குறைந்துள்ளது. மேலும் வானில் மேகக்கூட்டங்கள் குறைந்து வானம் தெளிவாக உள்ளது. அதன் காரணமாக சூரியக் கதிர் நேரடியாக பூமியை தாக்குகிறது. அதன் விளைவாக வெப்பநிலை அதிகரிக்கிறது. நேற்று மாலை 5.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை அளவுகளின்படி கோவை, மதுரை விமான நிலையம், நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய நகரங்களில் 95 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக சேலத்தில் 97 டிகிரி பதிவாகியுள்ளது. வரும் நாட்களில் வெப்பநிலை உயருமா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
வணிகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
தொழில்நுட்பம்
9 hours ago
சினிமா
10 hours ago
க்ரைம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago