தமிழகத்தில் உயர்ந்து வரும் பகல் நேர வெப்பநிலை: 5 நகரங்களில் 95 டிகிரி வெயில் பதிவு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை உயர்ந்து வருகிறது. நேற்று 5 நகரங்களில் 95 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலைக்கு மேல் வெயில் சுட்டெரித்தது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பகல்நேர வெப்பநிலை உயர்ந்து வருகிறது. அதனால் பல நகரங்களில் இப்போதே வெயில் சுட்டெரித்து வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் கூறியதாவது:

தற்போது ஈரப்பதம் மிகுந்த கடல் காற்று வீசுவது குறைந்துள்ளது. மேலும் வானில் மேகக்கூட்டங்கள் குறைந்து வானம் தெளிவாக உள்ளது. அதன் காரணமாக சூரியக் கதிர் நேரடியாக பூமியை தாக்குகிறது. அதன் விளைவாக வெப்பநிலை அதிகரிக்கிறது. நேற்று மாலை 5.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை அளவுகளின்படி கோவை, மதுரை விமான நிலையம், நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய நகரங்களில் 95 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக சேலத்தில் 97 டிகிரி பதிவாகியுள்ளது. வரும் நாட்களில் வெப்பநிலை உயருமா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

சினிமா

10 hours ago

க்ரைம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்