காட்டாங்கொளத்தூர் - கூடுவாஞ்சேரி இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் 4 நாட்களுக்கு நடக்க உள்ளதால், மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
காட்டாங்கொளத்தூர் - கூடுவாஞ்சேரி இடையே 24 (இன்று), 27, 28, 31 ஆகிய தேதிகளில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடக்க உள்ளன. இதனால், மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு காலை 10.08, 10.56 மணி மின்சார ரயில்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு காலை 11.48 மணி ரயில் தாம்பரம் வரை இயக்கப்படும். இதேபோல், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை காலை 11.30 மணி ரயில் கூடுவாஞ்சேரியில் இருந்து இயக்கப்படும். திருமால்பூர் - சென்னை கடற்கரை காலை 10.40 மணி ரயில் கூடுவாஞ்சேரியில் இருந்தும், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மதியம் 12.20 மணி ரயில் தாம்பரத்தில் இருந்தும் இயக்கப்படும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
11 hours ago
விளையாட்டு
12 hours ago
இந்தியா
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago