சிதம்பரம் அருகே காதலிக்க மறுத்ததால் பெண்ணை கத்தியால் குத்தி கழுத்தை அறுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
காடாம்புலியூர் அருகே உள்ள குட்டியாண்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல் முருகன். இவரது மகள் தன லட்சுமி (19). இவர் சிதம்ப ரம் அருகே உள்ள வடமூர் கிராமத்தில் அவரது பாட்டி ராதா வீட்டில் தங்கி சிதம்பரத்தில் உள்ள சிப்ஸ் கடையில் வேலை செய்து வந்தார். உளுந்தூர் பேட்டை அருகே உள்ள களமரு தூர் மாரியம்மன் கோயில் தெரு வைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் மகன் சக்திவேல் (23). இவரும் தனலட்சுமி வேலை செய்து வந்த சிப்ஸ்கடையில் வேலை செய்து வந்தார். இரு வருக்கும் ஏற்பட்ட பழக்கம், காதலாக மாறியதாக கூறப் படுகிறது. இந்நிலையில் சிப்ஸ் கடை உரிமையாளர் கடந்த 2 மாதத்துக்கு முன்பு இருவ ரையும் வேலையில் இருந்து நிறுத்தியுள்ளார்.
சிதம்பரம்
நேற்று மதியம் வடமூர் கிரா மத்தில் உள்ள பாட்டி வீட்டில் தனலட்சுமி இருந்தார். அங்கு சென்ற சக்திவேல் அவரிடம் பேசி கொண்டிருந்தார். திடீ ரென தனலட்சுமியை கத்தியால் குத்தி கழுத்தை அறுத்துவிட்டு ஓடி விட்டார். தனலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டனர். 108 ஆம்பு லன்ஸ் மூலம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த் தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி கார்த்தி கேயன் மருத்துவமனைக்கு சென்று தனலட்சுமியிடம் விசா ரணை நடத்தினார். இது தொடர்பாக சிதம்பரம் வட் டார காவல் நிலைய சப்-இன்ஸ் பெக்டர் நாகராஜன் மற்றும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.
சக்திவேல் வேறு ஜாதி என்று தெரிந்ததால் தனலட் சுமி காதலை மறுத்ததாக வும், இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் கத்தியால் குத்திய தாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிப்ஸ் கடை உரிமையாளர் கடந்த 2 மாதத்துக்கு முன்பு இருவரையும் வேலையில் இருந்து நிறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
வணிகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தொழில்நுட்பம்
4 hours ago
சினிமா
6 hours ago
க்ரைம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
6 hours ago
க்ரைம்
7 hours ago