ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், 4 கிராமங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தவிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பரவலான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு ஸ்ரீவில்லிபுத்தூரை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் திடீரென பெய்த கனமழை காரணமாக ஓடைகளிலும் காட்டாறுகளிலும் நீர்வரத்து அதிகரித்தது.
இதனால், கூமாபட்டி- பிளவக்கல் அணைக்குச் செல்லும் சாலையில் ரஹ்மத் நகர் பகுதியில் உள்ள கோவிந்தமேடு பாலம் வெள்ளப்பெருக்கால் உடைந்தது. தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் வந்து கொண்டிருப்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கிழவன் கோயில், வண்ணாப்பாறை, பட்டுப்பூச்சி, பிளவக்கல் அணை உள்ளிட்ட 4 கிராமங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
9 hours ago
சினிமா
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
11 hours ago
விளையாட்டு
11 hours ago