சேலம்
அமமுகவில் செய்தித் தொடர்பாளராக இருந்த வா.புகழேந்தி, விரைவில் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக-வில் இணைவது குறித்து சேலத்தில் இன்று முக்கிய அறிவிப்பை வெளி யிடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த வாரம் தமிழக முதல்வர் பழனிசாமியை வா.புகழேந்தி, திடீரென சந்தித்தார். அப்போது இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக முதல்வரை சந்தித்ததாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர் விரை வில் அதிமுகவில் இணை வார் என்று தகவல் வெளி யானது.
இந்நிலையில் போட்டி அமமுக-வின் சேலம் மண்டல நிர்வாகிகளின் ஆலோ சனைக் கூட்டம் புகழேந்தி தலைமையில் சேலத்தில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், புகழேந்தி தலை மையிலான போட்டி அம முகவை, அதிமுகவுடன் இணைப்பது குறித்த முக் கிய தீர்மானங்கள் நிறை வேற்றப்படும் என்று தக வல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து வா.புகழேந்தி ‘இந்து தமிழ்’ நாளித ழிடம் கூறியதாவது:
கோவை மண்டலத்தை அடுத்து போட்டி அமமுக சேலம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை சேலத்தில் நடத்துகிறோம். டிடிவி தினகரனை நம்பி பயணித்து, பதிவு செய்யப் படாமல், உறுப்பினர் அட் டையும் இல்லாத இயக்கத் தில் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை. தோல்வி களே மிஞ்சிய நிலையில் வேறு வழியின்றி அதை எதிர்த்து, பயணிக்க வேண் டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி, நாங்கு நேரி இடைத்தேர்தலில் மக் கள் அளித்த தீர்ப்பு ஆளுங் கட்சிக்கு சாதகமாக அமைந் துள்ளது. மேலும், தலைவர் கண்டெடுத்த இந்த கட்சி யும், ஜெயலலிதா விட்டுச் சென்ற ஆட்சியும் முதல்வர் பழனிசாமி தலைமையில் வெற்றிப் பாதையில் செல் வது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதுபோன்ற சூழலில், கட்சியைக் காப்பாற்றுவது ஒவ்வொரு அதிமுக தொண் டனின் கடமை என்று நினைக்கிறேன். முழுவது மாக தோல்வியடைந்த தின கரன், கட்சியை பதிவு செய்ய முடியாமல் தவித்து வருவதை காண முடிகிறது. இது தொடர்பாகவும், நாங் கள் எங்கே இணைய வேண்டும் என்ற முடிவை யும் ஆலோசித்து அறிவிக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
57 mins ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago