கரூர்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு இன்று (அக்.23) தீபாவளி முன்பணமும், நாளை (அக்.24) போனஸூம் வழங்கப்படும் என மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 8 கோட்டங்களில் பணியாற்றிவரும் 1.36 லட்சம் தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்குவதற்காக முதல்வர் பழனிசாமி ரூ.206.52 கோடி நிதி ஒதுக்க உத்தரவிட்டுள்ளார்.
அக்.24-ம் தேதி (நாளை) முதல் போனஸ் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.16,800 போனஸாக கிடைக்கும். தீபாவளி பண்டிகைக்கான முன்பணம் ரூ.10 ஆயிரம் அக்.23-ம் தேதி (இன்று) முதல் வழங்கப்படும்.
தீபாவளியை பண்டிகையையொட்டி, வழக்கமான பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளையும் சேர்த்து மொத்தம் 21,586 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் விரைவில் 50 ஏசி பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
இந்தியா
3 mins ago
இந்தியா
36 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இலக்கியம்
8 hours ago
தமிழகம்
3 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago