சென்னை
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. எனவே, இயற்கை சீற்ற பாதிப்புகளில் இருந்து மீனவர்களை பாதுகாக்க ஆபத்து காலங்களில் அவர்களுக்கு உதவும் வகையில் சென்னை நந்தனத்தில் உள்ள மீன்வளத் துறை தலைமை அலுவலகத்தில் கட்டுப் பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பருவ மழைக் காலங்களில் மீனவர்கள், மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்கு நர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு வானிலை உட்பட அனைத்து தகவல்களையும் கேட்ட றிந்து கொள்ளலாம்.
ஆபத்து காலங்களில் தொடர்பு கொள்ளும் மீனவர்களுக்கு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்து உத வுவதற்காக மீன்வளத் துறையின் தலைமை அலுவலகத்தில் கட்டுப் பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து உதவி இயக்குநர்களை ஒருங்கிணைத்து பிற துறைக ளுடன் இணைந்து இந்த கட்டுப்பாட்டு அறை செயல்படும். இதன் மூலம் 24 மணி நேரமும் மீனவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
4 hours ago
வாழ்வியல்
5 hours ago
தமிழகம்
5 hours ago
ஆன்மிகம்
4 hours ago
கருத்துப் பேழை
5 hours ago