சுப.ஜனநாயகச்செல்வம்
மதுரை
வெளியூரில் இருந்து கைக் குழந்தையுடன் மதுரை மாட்டுத்தாவணி (எம்ஜிஆர்) பேருந்து நிலையத்துக்கு வரும் தாய்மார்களுக்கு, கடந்த 15 ஆண் டாக இலவசமாக பசும் பால் வழங்குகிறார் டீக்கடைக்காரர் குணா சுரேஷ்.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு தினமும் ஆயிரக் கணக்கானோர் வருகின்றனர். பேருந்து நிலைய வளாகத்தில் டீக்கடைகள், உணவகங்கள், பழக்கடைகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நடைபாதைகளிலும், நிழற்குடைகளிலும் பூ வியா பாரிகள், பழ வியாபாரிகளும் பொருட்களை விற்கின்றனர்.
பேருந்து நிலையத்தினுள் டீக்கடை வைத்துள்ள குணா சுரேஷ் (52) வெளியூரிலிருந்து வரும் பயணிகளின் கைக்குழந்தை களுக்கு இலவசமாக தரமான பசும்பால் வழங்கி வருகிறார். இதனை கடந்த 15 ஆண்டாகச் செய்து வருகிறார்.
இதுகுறித்து குணா சுரேஷ் கூறியதாவது: நானும், எனது அண்ணன் குடும்பத்தினரும் 15 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சென்றிருந்தோம்.
கோயம்பேட்டிலிருந்து பஸ் ஏறும்போது, அண்ணனின் கைக் குழந்தை அழுததால், அங்குள்ள டீக்கடையில் பால் வாங்கிக் கொடுத்தோம். அப்போது கெட்டுப் போன பாலை குடித்ததில் குழந்தையின் உடல் நிலை பாதித்தது. மதுரைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தும் குழந்தையைக் காப்பாற்ற முடிய வில்லை.
நமக்கு நேர்ந்த கதி வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில் அப்போதே ஒரு முடி வெடுத்தேன். பஸ் நிலையத்தில் கடை வைத்துள்ள நாமும், இனிமேல் தரமான பாலையே நுகர்வோருக்கு விற்க வேண்டும். அதுவும் வெளியூரிலிருந்து கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு இலவசமாக பால் வழங்க வேண்டும் என முடிவெடுத்தேன். அன்றிலிருந்து இன்று வரை தரமான பசும் பாலையே விற்கிறேன். தினமும் கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு இலவசமாக பால் வழங்கி வருகிறேன். இதற்காக அறிவிப்பு பலகை வைத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
54 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தொழில்நுட்பம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago