தமிழ் தெரியாமல் குரூப்-2 தேர்வில் வெற்றி பெற முடியாது: டிஎன்பிஎஸ்சியின் புதிய தேர்வு திட்டம் 

By செய்திப்பிரிவு

சென்னை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 பாடத்திட்டத்தில் பொதுத்தமிழ் நீக்கப்பட்டதால் தமிழ் மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டதாக பலரும் விமர்சித்து வரும் வேளையில் பாடத்திட்டத்தையும் தேர்வு முறையையும் முறையாக ஆராய்ந்தோமானால் தமிழ் தெரியாமல் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற முடியாது என்பதே உண்மை என தெரியவரும்.

பொதுத்தமிழ், பொது ஆங்கிலம் நீக்கப்பட்டதால் தமிழ் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள், அண்டை மாநிலத்தார் பயன்பெறும் வகையில் பாடதிட்டம் என்றெல்லாம் இதுகுறித்து முழுதும் அறியாமல் விமர்சனங்கள் எழுகின்றன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 பணிகளில் நேர்முகத் தேர்வு, நேர்முகத் தேர்வு அல்லாத பணிகளுக்கான என பாடதிட்டங்களும் வரையறை செய்யப்பட்டு புதிய பாடத்திட்டத்தினை வெளியிட்டுள்ளது. தமிழில் அதிக பாடங்களும், இதற்கென சிலபஸும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்காக தனியாக பயிற்சி பெறவேண்டியதில்லை, தமிழுக்கான வாய்ப்பில்லை என தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள், அண்டை மாநிலத்தவருக்கு வாய்ப்பு என்றெல்லாம் மேம்போக்காக பார்த்து எதிர்ப்புகள் பதிவு செய்யப்படுகின்றன.

உண்மை என்னவென்றால், பாடதிட்டங்கள் எழுதுபவர் திறமையை சோதிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது (தமிழ் , ஆங்கிலம் எதில் வேண்டுமானாலும் எழுதலாம்). பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், இதில் வரலாறு, ஆட்சியமைப்பு, புவியியல், பொருளாதாரம், அறிவியல் சார்ந்து கேள்விகள் இருக்கும்.

இந்தியாவில் புவியியல், இந்திய ஆட்சியியல், இந்திய பொருளாதாரம், தமிழ்நாட்டின் வரலாறு பண்பாடு, சமூக அரசியல் இயக்கங்கள், அதில் தமிழ் தொல்லியல் கண்டுபிடிப்புகள், சங்க காலம் முதல் இக்காலம் வரை தமிழ் இலக்கிய வரலாறு, திருக்குறள், தமிழக அரசியல், சமூகம் குறித்த பாடம், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் மற்றும் திறனறிவு, தர்க்க அறிவு, நுண்ணறிவு குறித்த பல்வேறு தலைப்புகளில் பாடம் உள்ளன.

இவைகளை முழுதாக கற்றுணரும் மாணவர் ஆங்கிலம் மற்றும் தமிழ் அறிந்தவராக இருக்கவேண்டும். அதன்படி குரூப்-2 தேர்வில் முதல் நிலை தேர்வு (கொள்குறி வகை) பட்டப்படிப்பு தரத்தில், பொது அறிவில் 175 கேள்விகள், தேர்வர்களின் திறனறிவு, மனக்கணக்கு, நுண்ணறிவு ஆகியவற்றில் 25 கேள்விகள், பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் கேட்கப்படும்.

சுமார் மூன்று மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வில் 300 மதிப்பெண்கள் அளிக்கப்படும். அதில் குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் பெற வேண்டும்.

அதேபோல் குரூப்-2 முதன்மை எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் பட்டப்படிப்பு தரத்தில் மூன்று மணிநேரம் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். அவற்றில் பகுதி 'அ'வில் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தல், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தல் ஆகியவற்றில் நான்கு கேள்விகள் கேட்கப்படும்.(இதில் தமிழ் தெரியாத யாரும் தேர்வு எழுத முடியாது)

நூறு மதிப்பெண்களுக்கான இந்தப் பகுதியில் குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் தேர்வர்கள் பெற்றாக வேண்டும். அதில் முக்கியமாக பகுதி 'அ'வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெறாத தேர்வர்களின் விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படாது.

அதேபோல் பகுதி 'ஆ'வில் சுருக்கி எழுதுதல், பொருள் உணர்திறன், சுருக்க குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல், திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல், அலுவல் சார்ந்த கடிதம் வரைதல் ஆகியவற்றிற்கு 200 மதிப்பெண்கள் அளிக்கப்படும். இந்தப் பகுதி முழுவதும் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மட்டும் விடை அளிக்க வேண்டும்.

குரூப்-2 தேர்வில் தமிழ் தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் பணியில் சேர முடியும் என்ற நிலை இனிமேல் வராது. காரணம் முதன்மை தேர்வில் தேர்வுக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தால் மட்டுமே அவர்களால் பகுதி 'அ ' விடையளிக்க முடியும். தமிழ் தெரியாதவர்கள், அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்கள், தமிழை பாடமாக எடுக்காதவர்கள் தேர்வை எழுத முடியாது.

பிற மாநிலத்திலிருந்து வரும் தேர்வர்கள் தமிழில் எழுதுவதற்கும் படிப்பதற்கும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு தெரியாமல் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கவும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கவும் முடியாது. இதனால் தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமல் பிற மொழியை மொழிப்பாடமாகத் தேர்வு செய்து படிக்கும் மாணவர்களும் குரூப்-2 பணியில் சேருவது கடினமாகவே அமையும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டத்தில் கிராமப்புறத்திலிருந்து தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் முதன்மைத் தேர்வுக்கு என தனியாக எந்தவித பயிற்சியும் மேற்கொள்ளவேண்டிய தேவைப்படாத வகையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தில் உள்ளதை முறையாக படித்து பயிற்சி எடுத்து வந்தாலே வெற்றி நிச்சயம்.

மேலும் முக்கியமாக நேர்முகத்தேர்வு பதவிகளுக்கு முதன்மை எழுத்துத்தேர்வு 300 மதிப்பெண், நேர்முகத்தேர்வு 40 மதிப்பெண் என 340 மதிப்பெண்களில் குறைந்தபட்சம் அனைத்து வகுப்பினரும் 102 மதிப்பெண்கள் பெற வேண்டும். நேர்முகத்தேர்வு அல்லாத குரூப் 2 A -பணிக்கு முதன்மை எழுத்துத் தேர்வு நடத்தப்படும் 300 மதிப்பெண்களில் அனைத்து வகுப்பினரும் குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் பெற வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குரூப் 2 தேர்வில் முதல்நிலைத் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாணவர்கள் தேர்விற்கான விடைகளை எழுத முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இங்கும் தமிழ் அறிந்தவர்கள் எளிதாக தேர்ச்சிப்பெற முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

31 mins ago

சினிமா

44 mins ago

விளையாட்டு

50 mins ago

வலைஞர் பக்கம்

3 mins ago

சினிமா

56 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

மேலும்