புதுச்சேரி
மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தற்போது எச்சரிக்கை கூண்டு ஏற்றும் கயிறு சீரமைத்து மாற்றப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஆந்திரக் கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சியானது அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
புதுச்சேரியில் தொடர்ந்து சில தினங்களாகவே மாலை மற்றும் இரவு நேரத்தில் மழைப்பொழிவு உள்ள சூழலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாவதன் காரணமாக காற்று வேகமாக வீசக்கூடும் என்பதாலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
எச்சரிக்கை கூண்டு சீரமைப்பு
புதுச்சேரியில் சில மாதங்களுக்கு முன்பு வீசிய காற்றில் புயல் எச்சரிக்கை கூண்டில் மூன்றாம் எண் விளக்கு சேதமானது. அதையடுத்து அவ்விளக்கின் பாகங்கள் கிடைக்காமல் கடந்த ஜூலை மாதம் சீரமைக்கப்பட்டது. அதையடுத்து புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றும் கயிறு சேதமானது. தற்போது மழைக்காலம் வருவதால் புதிய கயிறுகளை மாற்றி அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. கிரேன் மூலம் இப்பணியில் துறைமுகத்துறையினர் ஈடுபட்டனர்.
செ.ஞானபிரகாஷ்
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
சினிமா
12 mins ago
சினிமா
26 mins ago
தமிழகம்
16 mins ago
இந்தியா
1 hour ago
கல்வி
29 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
31 mins ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
2 hours ago