திறந்தநிலை, தொலைநிலைக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு: பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை

திறந்தநிலை, தொலைநிலை படிப்புகளில் மாணவர்கள் சேருவதற் கான கால அவகாசத்தை யுஜிசி நீட்டித்துள்ளது.

நாடு முழுவதுள்ள உயர்கல்வி நிறுவனங்களின் தொலைநிலைப் படிப்புகளை நிர்வகிக்கும் பொறுப்பு, பல்கலைக்கழக மானி யக் குழு (யுஜிசி) கட்டுப்பாட்டில் 2017-ம் ஆண்டு கொண்டு வரப் பட்டது.

திறந்தநிலை, தொலைநிலை படிப்புகளில் நடப்பு கல்வி ஆண்டு (2019-20 ) மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முடித்து விட வேண்டுமென யுஜிசி முன்பு அறிவித்திருந்தது. தற்போது இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட் டுள்ளது.

இதுகுறித்து யுஜிசி வெளியிட்ட அறிவிப்பில், ‘‘கல்வி நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று தொலைநிலைப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கால அவகாசம் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. தொடர்ந்து சேர்க்கை பணிகளை முழுமையாக முடித்து அதன் விவரங்களை யுஜிசி இணையதளத்தில் அக் டோபர் 10-ம் தேதிக்குள் பதி வேற்ற வேண்டும்’’ என்று கூறப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் மாண வர் சேர்க்கைக்கு விண்ணப்பிப் பதற்கான அவகாசம் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

விருப்பமுள்ள மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் நேரிலோ அல்லது http://online.ideunom.ac.in என்ற இணைய தளம் மூலமாகவோ விண்ணப்பிக் கலாம். கூடுதல் விவரங்களை www.ideunom.ac.in இணையதளத்தில் அறிந்துக் கொள்ளலாம்’’ என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

38 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்