புதுச்சேரி
புதுச்சேரி அரசால் நிதி ஆதாரங்கள் முழுமையாக செலவு செய்யப்படுவதால் புதுச்சேரியின் நிதி நிலைமை சீராக உள்ளது என புதுச்சேரி சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஆக.26) காலை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரையுடன் தொடங்கியது. அப்போது கிரண்பேடி பேசியதாவது:
புதுச்சேரி அரசு ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்காக எடுத்து வரும் முயற்சிகள், செயல்படுத்தும் திட்டங்கள் ஆகியவற்றால் மிகவும் திருப்தி அடைந்துள்ளேன்.
ஆட்சி பரப்பில் நிதி ஆதாரம் அளவாகவே இருக்கிறது. செலவுகளை வருவாய்க்கு தகுந்த வகையில் சீர் செய்ய வேண்டிய நிலையில் அரசு உள்ளது. பல்வேறு நிதி நெருக்கடி இருந்தபோதிலும் ஏழை மக்களின் நலனை பேண தேவையான நிதியை அரசு தொடர்ந்து தொய்வில்லாமல் ஒதுக்கீடு செய்கிறது.
தற்போது நடைமுறையில் உள்ள நலத்திட்டங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அரசு செயல்படுகிறது. குறிப்பாக கடந்த 2008-09-ல் பெறப்பட்ட பொதுச் சந்தைக்கடன் ரூ. 351 கோடியை கடந்தாண்டு அரசு திருப்பி செலுத்தியுள்ளது.
மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி 2018-19-ல் ரூ. 35,860 கோடி. இது முந்தைய ஆண்டை விட 11 சதவீதம் அதிகம். புதுச்சேரியின் தனிநபர் வருவாய் 2017-18 இல் ரூ. 2.03 லட்சமாக இருந்தது. இது 2018-19 இல் ரூ. 2.20 லட்சமாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டை விட இது 8 சதவீதம் அதிகம்.
நிர்வாக காரணங்கள் மற்றும் போதிய நிதி ஆதாரங்கள் இல்லாத நிலையிலும் புதுச்சேரி நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. நிதி ஆதாரங்கள் முழுமையாக செலவு செய்யப்படுவதால் நிதி நிலைமை சீராக உள்ளது. புதுச்சேரியின் ஒட்டுமொத்த வளர்ச்சியை புதிய உச்சத்துக்கு புதுச்சேரி அரசு கொண்டு செல்லும் என்பது உறுதி என்று குறிப்பிட்டார்.
செ,ஞானபிரகாஷ்
அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
தமிழகம்
3 hours ago
சுற்றுலா
3 hours ago
வாழ்வியல்
3 hours ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
தமிழகம்
4 hours ago