சென்னை மற்றும் திருநெல்வேலி இடையே கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் அடுத்த மாதம் சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை எழும்பூரில் இருந்து ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு 9 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (00603) மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். இதேபோல் நெல்லையில் இருந்து ஆகஸ்ட் 16, 23 மற்றும் 30-ம் தேதிகளில் மதியம் 2.45 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (00604) மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.
சென்ட்ரல்-எர்ணாகுளம்
சென்னை சென்ட்ரலில் இருந்து ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (00605) மறுநாள் காலை 11.15 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். இதே சிறப்பு ரயில் (00606) மறுமார்க்கமாக ஆகஸ்ட் 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.15-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (17-ம் தேதி) தொடங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
15 mins ago
இந்தியா
26 mins ago
தமிழகம்
29 mins ago
இந்தியா
33 mins ago
க்ரைம்
27 mins ago
தமிழகம்
50 mins ago
இந்தியா
54 mins ago
தொழில்நுட்பம்
59 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago