சென்னை - திருநெல்வேலி இடையே விரைவில் சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை மற்றும் திருநெல்வேலி இடையே கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் அடுத்த மாதம் சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை எழும்பூரில் இருந்து ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு 9 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (00603) மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். இதேபோல் நெல்லையில் இருந்து ஆகஸ்ட் 16, 23 மற்றும் 30-ம் தேதிகளில் மதியம் 2.45 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (00604) மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.

சென்ட்ரல்-எர்ணாகுளம்

சென்னை சென்ட்ரலில் இருந்து ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (00605) மறுநாள் காலை 11.15 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். இதே சிறப்பு ரயில் (00606) மறுமார்க்கமாக ஆகஸ்ட் 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.15-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (17-ம் தேதி) தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

இந்தியா

26 mins ago

தமிழகம்

29 mins ago

இந்தியா

33 mins ago

க்ரைம்

27 mins ago

தமிழகம்

50 mins ago

இந்தியா

54 mins ago

தொழில்நுட்பம்

59 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

மேலும்