திருநெல்வேலி
``கட்சியை பதிவு செய்து நிரந்தர சின்னம் கிடைத்துவிட்டால், நாங்கு நேரி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடு வோம்” என்று, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாளை யொட்டி, பாளையங்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், அவர் கூறியதாவது:
அமமுக கட்சியை பதிவு செய்வதில் இப்போது கவனமாக செயல்படுகிறோம். நாங்குநேரி இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன் கட்சியை பதிவு செய்து, சின்னமும் கிடைத்தால் தேர்தலில் போட்டியிடுவோம்.
சின்னம் கிடைக்கவில்லை என்பதால் தான் வேலூர் தொகுதியில் போட்டியிட வில்லை. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. வரும் அக்டோபரில் இத்தேர்தலை நடத்தும் தேதியை அறிவிப்பதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தங்கள் சுய லாபத்துக்காக அமமுகவில் இருந்து சிலர் மட்டும் விலகி மற்ற கட்சிகளில் இணைந் துள்ளனர். இதனால் அமமுகவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
தமிழகம்
3 hours ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
41 mins ago
சினிமா
51 mins ago
இந்தியா
59 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago