தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ''தமிழகப் பகுதியில் வளிமண்டல காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இன்று, வட தமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்'' என்று தெரிவித்தது.
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகத்தில் மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை மையம் அதிகாரி ஒருவர் கூறும்போது, “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதில் தமிழகத்தில் மிதமான மழை தொடரும்.
விழுப்புரம், கடலூர் அரியலூர், திருவாரூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். இதில் தலைநகர் சென்னை மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணிநேரத்தில் வேலூரில் அதிகபட்சமாக 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது” என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
12 hours ago
விளையாட்டு
13 hours ago
இந்தியா
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago