மடிப்பாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 12 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை மடிப்பாக்கம் மூவரசம்பேட்டை சபாபதி நகர் 2-வது தெருவில் வசித்தவர் வெற்றிச்செல்வன் (46). விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர். இவரை கடந்த மே மாதம் 20-ம் தேதி காரில் வந்த ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது.
போலீஸார் நடத்திய விசாரணையில் கானாத்தூரை சேர்ந்த ஜெகநாதன் என்பவருக்கும், வெற்றிச்செல்வனுக்கும் நிலத் தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, கூலிக்கு ஆட்களை வைத்து வெற்றிச்செல்வனை ஜெகநாதன் கொலை செய்தது தெரிந்தது.
அதைத்தொடர்ந்து ஜெகநாதன், ராஜேஷ் (எ) நாகைய்யா, பெருமாள், கணேஷ், பிரபு, பாலகிருஷ்ணன், தினேஷ், வேலு, பழனி, மோகன், வினோத்குமார், செந்தில்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 12 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் நேற்று உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
சினிமா
7 hours ago
தொழில்நுட்பம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
கல்வி
8 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
தமிழகம்
9 hours ago