துரோகம் என்ற சொல் வைகோவுக்குத்தான் பொருந்தும்: காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர்

By செய்திப்பிரிவு

துரோகம் என்ற சொல் வைகோவுக்குத்தான் பொருந்தும், காங்கிரஸுக்குப் பொருந்தாது எனக் கூறியிருக்கிறார் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர்.

விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஓவியர் இளவரசி சொக்கரின் ஓவியங்கள் கண்காட்சி மற்றும் விற்பனையை விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "வைகோ மக்களால் நிராகரிக்கப்பட்டவர். பொய் சொல்லி பிழைப்பு நடத்துபவர். துரோகம் என்ற சொல் வைகோவுக்குத்தான் பொருந்துமே தவிர காங்கிரஸுக்குப் பொருந்தாது. காங்கிரஸே 370-ஐ காப்பாற்றி வந்தது. இன்றும் காஷ்மீரை காப்பாற்ற நிற்கிறது. ஆனால், அமித்ஷாவை திருப்திபடுத்த, அவர்களிடம் நற்பெயர் வாங்கவே வைகோ இப்படியெல்லாம் பேசுகிறார்.

தமிழகத்தில் மக்கள் விரோத கமிஷன் ஆட்சி நடைபெற்று வருகிறது" என்றார்.

நிகழ்ச்சியில் கங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஸ்ரீராஜாசொக்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

சினிமா

13 mins ago

இந்தியா

20 mins ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

மேலும்