தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன்பேட்டி:
“வெப்பச் சலனம் மற்றும் தென்மேற்குப் பருவக் காற்று காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 21 செ.மீ. மழையும், மேல் பவானியில் 9 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றின் வேகம் 45 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசும் என்பதால் அந்தப் பகுதி மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம். புயலுக்கு வாய்ப்பு இல்லை”.
இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 hour ago
க்ரைம்
23 mins ago
இந்தியா
1 hour ago
சினிமா
3 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
4 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
4 hours ago
தமிழகம்
1 hour ago