மத்திய ஜவுளித் துறை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 7-ம் தேதி சென்னைக்கு வர இருப்பதாகக் கூறப்படுகிறது.
நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை.
பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட் ஏவப்படுவதை நேரில் பார்ப்பதற்காக 2014 ஜூன் 29-ம் தேதி ஹரிகோட்டா செல்லும் வழியில் சென்னை வந்த அவரை, முதல்வர் ஜெயலலிதா மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் விமான நிலையத்தில் சந்தித்து பேசினர். அதன் பிறகு அவர் தமிழகத்துக்கு வருகை தரவில்லை.
வெளிநாடுகளுக்கு தொடர்ந்து பயணம் மேற்கொள்ளும் மோடி, தமிழகம் வராதது குறித்து பலரும் குற்றம்சாட்டி வரு கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடிக்கு சென்னை வரு வதற்கான விமான டிக்கெட்டை எடுத்து அனுப்பும் போராட்டத்தை காங்கிரஸ் நடத்தியது.
இந்நிலையில் மத்திய ஜவுளித்துறை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 7-ம் தேதி சென்னை வரவிருப்பதாக பாஜக முக்கிய நிர்வாகி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறினார்.
அப்போது தமிழக பாஜக தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி களின் தலைவர்களுடன் அவர் ஆலோ சனை நடத்த இருப்பதாகவும் கூறப்படு கிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
தமிழகம்
3 hours ago
சுற்றுலா
3 hours ago
வாழ்வியல்
3 hours ago
வாழ்வியல்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
தமிழகம்
4 hours ago