மதுரை மாவட்டத்தில் அரசு கிரா னைட் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடு குறித்து டாமின் மேலாளர்களிடம் சட்ட ஆணையர் உ.சகாயம் நேற்று 5 மணி நேரத்துக் கும் மேல் விசாரணை நடத்தினார்.
அரசு நிறுவனமான டாமின் மதுரை மாவட்டத்தில் பல கிரானைட் குவாரிகளை நடத்தியது. தனியாரிடம் டாமின் தங்களது குவாரிகளையும் குத்தகைக்கு விட்டிருந்தது. இந்த குவாரிகளிலும் மற்ற தனியார் குவாரிகளில் நடைபெற்ற அளவுக்கு விதிமீறல்கள் இருந்தன.
இது தொடர்பாக பதில் அளிக்க டாமின் நிர்வாக இயக்குநர் வள்ளலார் நேரில் ஆஜராக வேண்டுமென சகாயம் சம்மன் அனுப்பியிருந்தார்.
ஆனால் நிர்வாக இயக்குநர் நேற்று ஆஜராகவில்லை. அவருக்குப் பதில் சென்னை அலுவலகத்தில் மேலாளர்களாகப் பணியாற்றும் வெங்கடேசன், கண்ணதாசன் ஆகியோர் விசாரணைக்கு வந்தனர். இவர்களிடம் சகாயம் 5 மணி நேரத்துக்கும் மேல் விசாரித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
தமிழகம்
3 hours ago
சுற்றுலா
4 hours ago
வாழ்வியல்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
தமிழகம்
5 hours ago