இயக்குநர் அமீர் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை

By செய்திப்பிரிவு

பெப்ஸியின் முன்னாள் தலைவரும், சினிமா இயக்குநருமான அமீர் உட்பட 8 பேர் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தென்னிந்திய திரைப்படத் தொழிலா ளர்கள் சம்மேளன (பெப்ஸி) கூட்டத்தில், தன் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக கூறி பெப்ஸியின் முன்னாள் தலைவர் அமீர் உட்பட 8 நிர்வாகிகள் மீது தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் செந்தில்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத் தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அமீர் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்தனர். நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அமீர் சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் வாதாடினார்.

இதையடுத்து அவதூறு வழக்கு விசா ரணைக்கு தடை விதித்தும், அமீர் உள்ளிட்டவர்கள் சைதாப்பேட்டை நீதிமன் றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தும் நீதிபதி பி.என்.பிரகாஷ் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்