டைடல் பார்க்குக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவரை பிடித்து போலீஸார் விசாரணை

By செய்திப்பிரிவு

சென்னை டைடல் பார்க்குக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள 108 கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவில் பேசிய ஒரு நபர், “நந்தம்பாக்கம் வர்த்தக மையம், தரமணி டைடல் பார்க் ஆகியவற்றில் இரு நாட்களில் குண்டு வெடிக்கும். எனது சகோதரர் ஒருவர் குண்டு வைக்க திட்டம் தீட்டியுள்ளார்” என்று கூறி விட்டு போனை வைத்து விட்டார்.

அதைத் தொடர்ந்து இரு இடங் களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர்.

வெடிகுண்டுகள் ஏதும் இல்லை

அங்கு சுற்றித் திரிந்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களின் உடைமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஆனால் வெடிகுண்டுகள் ஏதும் சிக்க வில்லை.

மிரட்டல் அழைப்பு செல்போனில் இருந்து பேசப்பட்டுள்ளது. அந்த எண்ணை வைத்து ஒருவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 mins ago

தமிழகம்

40 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஓடிடி களம்

12 hours ago

மேலும்