மெட்ரோ ரயில் பணியின்போது சாலையில் விரிசல்

By செய்திப்பிரிவு

மெட்ரோ ரயில் பணியின்போது பழவந்தாங்கல் சிக்னல் அருகே சாலையில் நேற்று ஏற்பட்ட விரிசலால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னையில் ஆலந்தூரில் இருந்து பரங்கிமலை மற்றும் விமானநிலையம் வரை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜிஎஸ்டி சாலையில் பழவந்தாங்கல் சிக்னல் அருகே நேற்று மாலை சுமார் 3 மீட்டர் தூரத்துக்கு விரிசல் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீஸார், விரிசல் ஏற்பட்ட பகுதியில் வாகனங்களை அனுமதிக்காமல், மாற்று பாதையில் போக்குவரத்தை திருப்பி விட்டனர். இதனால் கிண்டி கத்திபாராவிலிருந்து விமான நிலையம் வரையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மெட்ரோ ரயில் பணியாளர்கள் விரிசல் ஏற்பட்ட பகுதியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 mins ago

ஜோதிடம்

8 mins ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்