ஜெயலலிதாவின் முதல்வர் பதவி நாட்கள் எண்ணப்படுகின்றன என சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்துள்ளதை சுட்டிக்காட்டி ட்விட்டரில் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டரில் "சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்துள்ளதால் முதல்வர் பதவியில் நீடிக்கும் உரிமையை ஜெயலலிதா இழந்து விட்டார்.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு அப்பீல் செய்துள்ளதன் மூலம் தமிழக மக்களின் அப்பீல் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்திருப்பதால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி நாட்கள் எண்ணப்படுகின்றன" போன்ற சில ட்வீட்களை பதிவு செய்துள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
7 mins ago
வாழ்வியல்
26 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
3 hours ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தொழில்நுட்பம்
2 hours ago
விளையாட்டு
4 hours ago