பேரறிவாளனுக்கு சென்னை மருத்துவமனையில் சிறுநீரக பரிசோதனை நடத்தப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் பேரறிவாளனுக்கு ஏராளமான உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. உயர் ரத்த அழுத்தம், முதுகுவலி, சிறுநீரக தொற்று போன்றவற்றால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 5 மாதத்துக்கு முன்பு பேரறிவாளனுக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிறுநீரக தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் பூரணமாக குணமடையவில்லை.
“சிறுநீரக தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்க வேலூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை. எனவே சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு பேரறிவாளன் மனு அளித்திருந்தார். அதை ஏற்றுக் கொண்ட அரசு, சிகிச்சை அளிக்க அனுமதி அளித்தது. இதையடுத்து சென்னையில் சிகிச்சை பெறுவதற்கு வசதியாக நேற்று முன்தினமே வேலூர் சிறையில் இருந்து புழல் சிறைக்கு பேரறிவாளன் அழைத்து வரப்பட்டார்.
நேற்று காலை 9 மணிக்கு புழல் சிறையில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு பேரறிவாளன் அழைத்து வரப்பட்டார். காலை 9.50 மணியில் இருந்து மதியம் 12.50 மணி வரை அவருக்கு முழு உடல் பரிசோதனை நடந்தது. டாக்டர் தியாகராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அவரை பரிசோதித்தனர். பேரறிவாளனின் ரத்தம், சிறுநீர் ஆகியவை பரிசோதனைக்கு எடுக்கப்பட்டன.
மருத்துவப் பரிசோதனை முடிவுகள் இன்னும் 3 நாட்களில் வந்துவிடும். அதன் பின்னரே அவரை உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிப்பதா வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். மதியம் 1 மணியளவில் மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளன், அங்கிருந்து வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
முதுகு வலியால் அவதிப்படும் பேரறிவாளன் காலைக் கடன்களை கழிப்பதற்கே சிரமப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் வேலூர் சிறை நிர்வாகத்திடம் 'வெஸ்டன் கழிப்பறை' கேட்டும் விண்ணப்பித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
11 hours ago
விளையாட்டு
12 hours ago
இந்தியா
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago