கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். இதனால், மீனவர்கள் வெறுங்கை யுடன் கரை திரும்பினர்.
ராமேசுவரத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க முயன்றனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது கற்கள், சோடா பாட்டில்கள் உள்ளிட்டவற்றை வீசி விரட்டி அடித்தனர்.
இதனால் அச்சமடைந்த சில மீனவர்கள் மீன்பாடு இல்லாத பகுதிகளில் மீன் பிடித்தனர். சிலர் மீன் பிடிக்காமலேயே கரை திரும்பினர்.
ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பிய மீனவர்கள் செய்தி யாளர்களிடம் கூறும்போது, மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இருநாட்டு மீனவர் களிடையேயான நான்காம் கட்டப் பேச்சுவார்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் விரைவில் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது விசைப்படகுகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
44 secs ago
சினிமா
6 mins ago
தமிழகம்
27 mins ago
இந்தியா
12 mins ago
சினிமா
36 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago