ஜெயலலிதாவின் முதல்வர் பணி தொடர வேண்டும்: எடியூரப்பா விருப்பம்

By செய்திப்பிரிவு

தமிழக முதல்வராக ஜெயலலிதாவின் பணி தொடர வேண்டும் என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வராக 5-வது முறை யாக பதவி ஏற்றுள்ள ஜெயலலிதாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய முதல்வர் பணி தொடர வேண்டும். நரேந்திர மோடி பிரதமராக ஓராண்டு ஆட்சியை பூர்த்தி செய்துள்ளார். அவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நிலம் கையகப்படுத்தும் சட்டம் தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அவசியமானது. நாடு வளர்ச்சிப் பணியில் செல்ல, இந்த சட்டம் கண்டிப்பாக தேவை. மோடி செயல்படுத்தும் ஒவ்வொரு திட்டத்தையும் உலக நாடுகள் கவனித்து வருகின்றன.

ஏழை மக்களுக்கு பயன்படும் திட்டங்கள்

உலகிலேயே 2 வது பெரிய தலைவராக மோடி உருவெடுத்து வருகிறார். மோடி அரசின் திட்டங்கள் ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

26 mins ago

விளையாட்டு

26 mins ago

விளையாட்டு

29 mins ago

விளையாட்டு

42 mins ago

இந்தியா

46 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்