தமிழகத்தில் 2011-ம் ஆண் டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதி யில் அதிமுக வேட்பாளராக ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் போட்டி யிட்டார். தேர்தல் பிரச்சாரத் தில் அதிக வாகனங்களில் சென்றது உட்பட தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ராஜகண்ணப்பன் மீது திருப்பத்தூர், சிங்கம்புணரி, திருக்கோஷ்டியூர் போலீஸார் 9 வழக்குகளை பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி ராஜகண்ணப்பன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன் நேற்று விசா ரணைக்கு வந்தன. ‘விசாரணைக்குப் பின் மனுதாரர் மீதான 9 வழக்கு களையும் போலீஸார் பதிவு செய்ததோடு விட்டுவிட்டனர். அதன் பிறகு மேல்நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் இது போன்ற பல்வேறு வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. எனவே, மனுதாரர் மீதான வழக்கு கள் ரத்து செய்யப்படுகின்றன’ என நீதிபதி உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
வாழ்வியல்
9 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
11 hours ago
ஓடிடி களம்
12 hours ago
இந்தியா
11 hours ago