காலியாக செல்லும் ரயிலில் பயணிகளை ஏற்றி செல்ல கோரிக்கை

By செய்திப்பிரிவு

ரயில் பயணிகள் சங்க நிர்வாகி பாஸ்கர் கூறியதாவது:

சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் காலை 8 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் ரயில் நிலையத்துக்கு ஒரு ரயில் காலியாக இயக்கப்படுகிறது. 9 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயில் எந்த ரயில் நிலையத்திலும் நிற்காமல் செல்கிறது. பின்னர், அங்கிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் சென்ட்ரல் வந்தடைகிறது.

தினமும் காலியாக இயக்கப்படும் இந்த ரயிலில் பயணிகள் ஏறக் கூடாது என்பதற்காக விரைவு ரயில்கள் செல்லும் பாதையில் இயக்கப்படுகிறது. தினமும் 30 கி.மீட்டர் தூரம் இவ்வாறு காலியாக இந்த ரயில் இயக்கப்படுகிறது.

அதற்குப் பதிலாக இந்த ரயிலை சாதாரண ரயிலாகவோ அல்லது பேசின்பிரிட்ஜ், பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், ஆவடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் விரைவு ரயிலாகவோ இயக்கினால் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

34 mins ago

ஜோதிடம்

37 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்